Blogger Widgets

உளூ செய்ய வேண்டிய நேரங்கள்


குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் முன்னால் உளூ செய்துகொள்ள வேண்டும். இது கட்டாயம் அல்ல. செய்வது சிறப்பு. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் உமர் பின் அல்கத்தாப் (ர-) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விடுவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்'' உளூ செய்யுங்கள்; உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி (290)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு எற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும்போது உண்ணவோ உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் ; முஸ்லிம் (513)

மறு உடலுறவுக்கு முன்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் தம் இல்லாளிடம் பாலுறவு கொண்டுவிட்டுப் பின்னர் மீண்டும் (உறவுகொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம் (518)

இச்சை நீர் வெளிப்பட்டால்?

இச்சை ஏற்படும் போது விந்து வெளிப்படுவதற்கு முன்னால் சிறிய அளவில் வெளிவரும் நீருக்கு இச்சை நீர் என்று சொல்லப்படுகிறது. இது வெளிப்பட்டால் குளிப்பு கடமையாகாது. மாறாக உளூ முறிந்துவிடும். மறும உறுப்பை கழுவிவிட்டு உளூ செய்துகொள்ள வேண்டும். 
இச்சைக் கசிவு நீர் ("மதீ') அதிகமாக வெüயேறும் ஆடவனாக நான் இருந்தேன். நபி (ஸல்) அவர்கüன் புதல்வி (ஃபாத்திமா என் மண பந்தத்தில்) இருந்ததால் இது பற்றிக் கேட்குமாறு (வேறு) ஒருவரை நான் பணித்தேன். அவர் (அது குறித்துக்) கேட்டபோது, "(அவ்வாறு இச்சைக் கசிவு நீர் வெüயேறினால்) உளூ செய்துகொள்வீராக! (குüக்க வேண்டியதில்லை. ஆனால்,) பிறவி உறுப்பைக் கழுவிக்கொள்வீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : புகாரி (269)
Share on :
 
© Copyright சுவர்கத்தின் பெண்மணி 2011 - Some rights reserved | Powered by Blogger.com.